அநுராதபுரம் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 ஐயாயிரம் போலி நாணயத்தாள்கள், 4 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் மற்றும் 7 நூறு ரூபா போலி நாணயத்தாள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளை வழங்கி பொருட் கொள்வனவில் ஈடுபட்ட சந்தர்ப்பத்திலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலென்பிந்துனுவெவ பகுதியை சேர்ந்த 25 மற்றும் 22 வயதான இரு இளைஞர்களே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



